இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கையில் பலர் உள்ளூர் அளவில் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்து வரும் சில சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வணிகர்கள் கடன் அல்லது பற்று அட்டைகள் உட்பட வெளிநாட்டு நாணய கணக்குகளில் பணம் செலுத்துவதற்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.

உள்ளூர் வணிகருக்கு வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தும் எந்தவொரு குடியிருப்பாளரும் அல்லது அங்கீகாரமின்றி அத்தகைய கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு வணிகரும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி ஒரு குற்றத்தைச் செய்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், ரூ. 25 மில்லியன் வரை அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடும்.

கடுமையான சட்ட விளைவுகளைத் தவிர்க்க, பொதுமக்கள் மற்றும் வணிக சமூகம் இந்த சட்டப்பூர்வ தேவைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்