நிறைவுக்கு வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகின்றது.

அதன்படி, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 45வது நாள் இன்றாகும். இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, 45 ஆவது நாளுடன் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.

சித்துப்பாத்தி மனித புதைக்குழி வளாகத்தில், மேலும் என்புக் கூடுகள் காணப்படக் கூடும் என நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அகழ்வுக்காக எட்டு வாரங்கள், கால அவகாசம் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கையிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை இன்றைய தினம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அடுத்த கட்ட அகழ்வு பணிகளுக்கு தேவையான பாதீட்டை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் 44ஆவது நாளுக்கான அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 240 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றில் 235 என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்