பொலிஸாரின் உத்தரவை மீறிச்சென்ற வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று (09) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

அம்பலாங்கொடை திசை நோக்கிப் பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றினைப் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நிறுத்துமாறு சைகை செய்தபோது, அந்த லொறி பொலிஸாரின் கட்டளையை மீறி நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றுள்ளது.

இதன் போது பொலிஸ் அதிகாரிகள் லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயற்சித்த வேளையில், லொறி தொடர்ந்து தப்பியோட முயன்றதால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த லொறியைப் பரிசோதித்த போது, அதில் 10 பசுக்களும் 4 எருமை மாடுகளும் இருந்துள்ளதுடன், அவற்றில் ஒரு பசு கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

லொறியில் இருந்த இரு சந்தேகநபர்களை 5,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் லொறியுடன் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடையவர்களாவர்.

லொறியின் சாரதி மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!