இலங்கையில் தங்கம் விலை திடீர் உயர்வு : ஒரே நாளில் இருமுறை மாற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் அதிரடி மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதன் நேரடித் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்துள்ளது.

குறிப்பாக, இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை திருத்தப்பட்டமை வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாட்களிலும் உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மேலதிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நகையக உரிமையாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

crime
கொழும்பின் புறநகர் பகுதியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி!
namal
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
tiktok
இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
srilanka
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையா?
gold price
உலக சந்தையில் வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
gold price
இலங்கையில் இன்று 4 இலட்சத்தை கடந்தது தங்க விலை!