கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு மீண்டும் நீடிக்கப்பட்ட தடுப்புக்காவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின், தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகிவிட்டதாகவும், மேலும் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி பெறப்பட்ட 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான நிலையிலேயே மீண்டும் தடுப்புக்காவல் கோரப்பட்டதாக இன்று வியாழக்கிழமை (05) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ள கம்பஹா பொலிஸ் ஆய்வாளர் உதித் உதயசாந்தவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் உத்தரவுகளைப் பிறப்பித்த நீதவான், எதிர்வரும் 19 ஆம் திகதி மன்றில் மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sagara Kariyavasam
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு
Hikkaduwa Footwear
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!
easter attack
உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
srilanka weather
வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
basil rajapaksa
வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
Ananda Wijepala
சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!