வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலக உறுப்பினர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இது குறித்து பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தியுள்ளனர்.

சுமார் 22 நிமிடங்கள் நீடிக்கும் இந்த உரையாடலில், ரசல் ஸ்மித், பிரெஞ்சு ரூபன், இங்கிலாந்தின் குடு லால் மற்றும் வெல்லே சாரங்க ஆகிய நான்கு குற்றவாளிகளே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ‘வெல்லே சாரங்க’ என்பவரை அந்த நாட்டு பொலிஸார் நடத்திய விதம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் அந்நாட்டுப் பிரஜைகளைத் தாக்குவதற்கு, இலங்கையிலுள்ள தனது சகாக்களைத் தூண்டுவது தொடர்பாக ரசல் ஸ்மித் இந்த உரையாடலில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!