இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் பதவியேற்பு!

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்னவின் ஓய்வைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, சுமார் 10 மாதங்களாக இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜயரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை கடந்த 3 ஆம் திகதி ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!