மண்டைதீவு கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் – மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப கட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 20ஆம் திகதி அங்கு T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்த தகவல் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, ரவைகளை மீட்க அனுமதி கோரினர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்பேரில், இன்று (22) காலை விசேட அதிரடிப் படையினரின் பங்களிப்புடன் அந்த ரவைகள் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!