வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 லிருந்து 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்க கூறுகையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு மூலம் வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கை தொழிலாளிக்கும் இந்த இழப்பீடு பொருந்தும்.

ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு 5.2 பில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளனர் என்றும் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 220,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பணம் அனுப்புவது 7 பில்லியன் டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sagara Kariyavasam
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு
Hikkaduwa Footwear
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!
easter attack
உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
srilanka weather
வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
basil rajapaksa
வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
Ananda Wijepala
சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!