இலங்கை கடலில் கரையொதுங்கிய இந்திய ஏவுகணை பாகங்கள்!

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் குறிப்பாக தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று (28.12.2025 ) குறித்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அப்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர் ஒருவர் குறித்த பாகத்தை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படமெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பாகமானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணையின் கழன்று விழுகின்ற பாகங்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்