போர் நிறுத்த பின்னணியில் சீனா – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில், இந்த போர் நிறுத்த முடிவை வரவேற்பதாக இன்று புதன்கிழமை தெரிவித்த சீன வெளி விவகார அமைச்சகம், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை நிலைநாட்ட சீனா தனது தரப்பிலிருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது.

சர்வதேச மோதல்களை அரசியல் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்பதையே சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அந்நாட்டின் வெளி விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த போர் நிறுத்தத்தை உறுதி செய்ய சீனா எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் அல்லது முன்னெடுத்த முயற்சிகள் குறித்த விரிவான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் பிராந்திய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்