போர் நிறுத்த பின்னணியில் சீனா – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில், இந்த போர் நிறுத்த முடிவை வரவேற்பதாக இன்று புதன்கிழமை தெரிவித்த சீன வெளி விவகார அமைச்சகம், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை நிலைநாட்ட சீனா தனது தரப்பிலிருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது.

சர்வதேச மோதல்களை அரசியல் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்பதையே சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அந்நாட்டின் வெளி விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த போர் நிறுத்தத்தை உறுதி செய்ய சீனா எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் அல்லது முன்னெடுத்த முயற்சிகள் குறித்த விரிவான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் பிராந்திய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்