அமெரிக்காவின் தாக்குதலிற்கு முன்னர் ஈரான் தனது போர்டோ அணுஉலையிலிருந்து மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றிவிட்டது என ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இரகசிய இடமொன்றிற்கு மாற்றிவிட்டது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
போர்டோ அணுஉலையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேற்று எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் போர்டோ அணுஉலைக்கு அருகில் நீண்டவரிசையில் டிரக்குகள் காணப்படுவதை காண்பித்துள்ளன.


