🔴 PHOTO கரடியனாறு பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள – கரடியனாறு இந்து வித்தியாலய பாடசாலையில் பாடசாலையால் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 14 மாணவர்கள்  மேலதிக சிகிற்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையால் உணவு ஒப்பந்தக்காரர் மூலம்  மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை உற்கொண்ட  மாணவர்களில் 22 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரடியனாறு  இந்து வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான  மாணவர்களில்
வாந்திபேதி , வயிற்றுவலி என்பன ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் உணவு ஒப்பந்தக்காரர் கைது செய்யப்படு நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!