🔴 PHOTO கரடியனாறு பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள – கரடியனாறு இந்து வித்தியாலய பாடசாலையில் பாடசாலையால் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 14 மாணவர்கள்  மேலதிக சிகிற்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையால் உணவு ஒப்பந்தக்காரர் மூலம்  மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை உற்கொண்ட  மாணவர்களில் 22 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரடியனாறு  இந்து வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான  மாணவர்களில்
வாந்திபேதி , வயிற்றுவலி என்பன ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் உணவு ஒப்பந்தக்காரர் கைது செய்யப்படு நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்