கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 18ஆம் திகதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் உணர்வெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.
இதன் முக்கிய நிகழ்வாக, பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் தமக்கான நீதியை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி, லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய இராச்சியம் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
