மொட்டுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமலே மீண்டும் களமிறங்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடியே இறுதியான மற்றும் உறுதியான முடிவை எடுக்கும்.” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்கி படுதோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
