எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கமைய, ஒவ்வொரு வகை வாகனத்திற்குமான எரிபொருள் ஒதுக்கீடு குறித்தும் அறிவித்துள்ளார்.
கார் – 25 லீற்றர்
முச்சக்கர வண்டி – 20 லீற்றர்
வேன் – 50 லீற்றர்
மோட்டார் சைக்கிள் – 8 லீற்றர்
பேருந்து – 100 லீற்றர்
நில வாகனம் – 40 லீற்றர்
லொரி – 200 லீற்றர்
