எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக, சிவில் வானூர்தி சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல கேள்விக்கு, பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கே ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நுகர்வோருக்காக 15 பில்லியன் ரூபாய் மானியத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
