குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்!.
ஏர் இந்தியா விமான விபத்தில் 11A-வில் அமர்ந்திருந்த 38 வயதுடைய ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் ரமேஷ் விஸ்வாஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் அவசரகால வெளியேற்றத்திலிருந்து வெளியே குதித்துள்ளார்.
இதே வேளை விமானம் விபத்துக்குள்ளானதில் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியிலிருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ramesh Viswashkumar, The sole survivor of the Air India crash escaped by jumping from the plane. He was on seat number 11A. #AirIndia #AhmedabadNews #Gujarat #PlaneCrash #ITReel pic.twitter.com/NsMBeZOkbX
— IndiaToday (@IndiaToday) June 12, 2025