பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கான வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனை சந்தித்துள்ளார்.

தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிகழ்வின் போது இந்த சந்திப்பு இடம்பெற்று்ளளது.

சபையின் பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வொன்றினை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.

இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!