விரைவில் ராஜபக்சர்களும் கைது! அரசாங்க அமைச்சர் தகவல்!

ராஜபக்சர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் மோசடி செய்த யாரும் தப்ப முடியாது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ரணில் விக்கிரமசிங்க மீது சட்டம் பாய்வதற்கு முன்னர் அவருடன் இருந்தவர்கள், ரணிலை நெருங்க முடியாது, அவர் மிகப் பெரிய சர்வதேச இராஜதந்திரி, மிகவும் நரித்தந்திரமானர் அவருடன் விளையாட முடியாது என்றெல்லாம் கூறினார்கள்.

இவ்வாறு கூறியவர்கள் எல்லோருக்கு இப்போது தெரியவந்திருக்கும். ரணிலே கைது செயப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்கதை. எனவே எதிர்வரும் நாட்களிலும் கைதுகள் இடம்பெறும்.

ஆகையினால் இந்த நாட்டில் மோசடி செய்த எவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அது ரணிலாக இருந்தாலும், ராஜபக்சர்களாக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.

மக்களின் பணத்தை சூரையாடியவர்கள் படிப்படியாக சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியாது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில வாரங்களில் வடக்கிலுள்ள அரசியல் வாதிகளும் கைது செய்யப்படுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார். விரைவில் அவர்கள் வாழ்வில் வசந்தம் தேடி வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!