செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் காரியாலத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

29.05.2026.வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஸ்குமார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த 21ம் திகதி டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநரை பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் வைத்து வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்போது செய்தி சேகரிப்பதற்கு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை மற்றும் ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து பதிவு செய்திருந்த வீடியோக்களை அழித்தமை, ஊடகவியலாரின் தனிப்பட்ட வட்ஸப் மெசேஜ்களை பரிசோதித்தமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை ஊடாக ஊடகவியலாளரின் மனித உரிமைகளை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!