செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் காரியாலத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

29.05.2026.வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஸ்குமார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த 21ம் திகதி டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநரை பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் வைத்து வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்போது செய்தி சேகரிப்பதற்கு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை மற்றும் ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து பதிவு செய்திருந்த வீடியோக்களை அழித்தமை, ஊடகவியலாரின் தனிப்பட்ட வட்ஸப் மெசேஜ்களை பரிசோதித்தமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை ஊடாக ஊடகவியலாளரின் மனித உரிமைகளை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!