ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை அனுமதி: வழக்கு செப்டம்பர் 27 வரை ஒத்திவைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றம் சாட்டப்பட்ட ஷஷி வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும்,ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக பிரதம நீதவான் தெரிவித்தார்.

எனினும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஷஷி வீரவன்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தனது சேவை பெறுநர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த மேன்முறையீடு தொடர்பில் அடுத்த மாதம் காரணங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதால், அதுவரை அவரை முன்பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை இருப்பதாகவும், அதன்படி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அதற்கான அறிவிப்புக்கு உட்பட்டு ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!