ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், இப்பலோகம மஹவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணையில் தெரியவருவதாவது,
இப்பலோகம மஹவ பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் பை ஒன்று கிடந்துள்ளது.
இதனை அவதானித்த ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த பையை சோதனையிட்டு பார்த்த போது பைக்குள் குழந்தை ஒன்று உயிருடன் இருந்துள்ளது.
இதனையடுத்து ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த குழந்தையை நிக்கவெரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையை வீட்டு வாசலில் யார் விட்டுச் சென்றது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.