கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான செயற்பாடுகள்: கவலைகளை எழுப்பியது இலங்கை

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தொடர்பான சின்னங்களை பொதுவெளியில் பயன்படுத்துவது மற்றும் பிரிவினைவாதச் சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கத்திடம் இலங்கை தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்ரின் மார்ட்டின் உடனான சந்திப்பில் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் உள்ள உள்ளூர் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பலவீனப்படுத்துவதாகவும், கட்டுப்படுத்தப்படா விட்டால் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கலாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போதும் கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்றும், அதன் சின்னங்களையோ அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களையோ கனேடிய மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், கனடா எப்போதும் இலங்கையின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!