🔴 PHOTO தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு! 22 பேர் உயிரிழப்பு!

சிரியாவின், டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (22)மாலை குறித்த தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிரேக்க ஒர்த்தடொக்ஸ் தேவாலயத்துக்குள் சென்ற ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிக்கும் அங்கியை வெடிக்கச் செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது எனவும் அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமை கோரலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்