🔴 PHOTO தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு! 22 பேர் உயிரிழப்பு!

சிரியாவின், டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (22)மாலை குறித்த தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிரேக்க ஒர்த்தடொக்ஸ் தேவாலயத்துக்குள் சென்ற ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிக்கும் அங்கியை வெடிக்கச் செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது எனவும் அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமை கோரலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்