வட்டிப் பண முரண்பாட்டால் அரங்கேறிய கொடூரம்!

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் குடும்ப பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (4 ) இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண்ணின் கணவர் நேற்று கூலி வேலைக்கு சென்ற நிலையில், மூன்று பிள்ளைகளுடன் வீட்டிலிருந்த தாயாரான 46 வயது பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் பெண்ணுடன் முரண்பட்டு கத்தியால் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதன்போது உயிருக்கு போராடிய குறித்த பெண்ணை அயலவர்கள் உடனே வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!