கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது.

56 வயதுடைய கதிரவேலு சிவராசலிங்கம் என்கின்ற குடும்பஸ்தரே குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் நேற்றிரவு (24) தாக்குதலை நடாத்திய கொலை செய்யப்பட்டவரின் மருமகன் மற்றும் மருமகனின் சிறிய தந்தை ஆகிய இருவரும் தலைமறைவாகி இருந்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இருவரும் அக்கராயன் பிரதேச பொலிஸாரல் இரவு 11 மணியளவில் முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
