கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மாயம்!

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில எங்கு இருக்கின்றன என்பது குறித்து கூட கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்றை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கண்டு கருத்த தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, சில துப்பாக்கிகள் தொடர்பான தரவுப் பதிவுகள் எதுவும் இல்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2024 ஆம் ஆண்டில் துப்பாக்கி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பிலிருந்து நிறைய தகவல்கள் தெரியவந்ததாகவும் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிகள் தொடர்பாக கடுமையான சட்டங்களைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கூறிய பிரதி அமைச்சர், தற்போது உலகின் பிற நாடுகளில் துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆய்வு செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!