“காவல்துறை அறிவிப்பு” என்ற பெயரில் பரவும் செய்தி போலியானது!

சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகளில் “காவல்துறை அறிவிப்பு” என்ற தலைப்பில் பரவி வரும் செய்தி முற்றிலும் போலியானது என இலங்கை காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பிட்ட செய்தியில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டவை அல்ல, அவை பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால், அதனை உத்தியோகபூர்வ அறிவிப்பாக கருத வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், காவல்துறை ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கைகள், உறுதிப்படுத்தப்பட்ட காவல்துறையின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றில் மட்டுமே வெளியிடப்படும்.

அரசாங்க நிறுவனங்களின் பெயரில் வரும் செய்திகளைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேண காவல்துறை முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமான மற்றும் உடனுக்குடனான தகவல்களுக்கு காவல்துறையின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிகளை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை