வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையின் கண்களானது மூடிய நிலையிலே காணப்பட்ட நிலையில் நேற்று (14.11) மாலை குறித்த சிலையின் கண்கள் திடீரென திறந்துள்ளது.
பக்தர் ஒருவர் வழிபடச் சென்ற போது குறித்த பிள்ளையார் சிலையில் ஒரு கண் திறந்து இருந்துள்ளது. அதன் பின் இரு கண்களும் திறந்த நிலையில்; பிள்ளையார் காட்சி கொடுத்துள்ளார். அவர் அதனை ஏனையவர்களுக்கு தெரிவித்த நிலையில் பலரும் அவ் அதிசயத்தை பார்க்க சென்றனர். சிறிது நேரம் திறந்து இருந்த கண்கள் பின்னர் வழமையான நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் சுற்றியுள்ளவர்களிற்கு அறிந்த நிலையில், குறித்த அதிசயத்தை காண பொதுமக்கள் அதிகளவில் கோவிலை சூழ்ந்து பிள்ளையாரை பார்த்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
