புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை செலுத்தும் போது அந்த நாணயத்தாள்களை இயந்திரம் ஏற்க மறுப்பதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கொட்டகலையில் உள்ள இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில், குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சில தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்யும் போது பணம் எண்ணும் இயந்திரங்களில் குறித்த தாள் நிராகரிக்கப்படும் சம்பவங்களும் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் கூறுகையில், பணம் எடுக்கும் மற்றும் வரவு வைக்கும் இயந்திரங்கள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரங்களில் புதிய 2000 ரூபா தாள்களைப் புதுப்பிக்கத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்