தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், பொதுநிகழ்ச்சிகளில் ‘கோட் சூட்’ அணிந்து தோன்றும் விஜய், நெற்றியில் கருமை நிற திலகம் அணிந்து வருவது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த திலகம், புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் “அரகஜா” திலகம் என தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோயில்களில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்தப்படும் “அரகஜா” திலகம், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவி வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் புதிய தோற்றமும் “அரகஜா” திலகமும் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
