ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோசமான நிலைமையின் போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை அண்டிய Beersheba மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இலங்கை செவிலியர் இரோஷிகா சதுரங்கனி என்பவரே ஈரான் நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இரோஷிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைத் தூதரகத்தினால் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்