ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோசமான நிலைமையின் போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை அண்டிய Beersheba மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இலங்கை செவிலியர் இரோஷிகா சதுரங்கனி என்பவரே ஈரான் நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இரோஷிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைத் தூதரகத்தினால் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!