யாழில். போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன் , மனைவி

யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன் மனைவி ஆகியோர் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , மனைவி தலைமறைவாகியுள்ளார்.

மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!