இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா – எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா – எலிய பகுதியைச் சேர்ந்த மானெத் அபூர்வா என்பவர் ஆவார்.
தனது வீட்டிலிருந்து நுவரெலியா நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்த இளைஞர், காட்டுச் சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் நுழைந்தபோது, இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி வேகமாகச் சென்ற பாரவூர்தி, மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாரவூர்தியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21ஆவது பிறந்தநாள் இன்று(22) என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.