பிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா – எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா – எலிய பகுதியைச் சேர்ந்த மானெத் அபூர்வா என்பவர் ஆவார்.

தனது வீட்டிலிருந்து நுவரெலியா நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்த இளைஞர், காட்டுச் சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் நுழைந்தபோது, ​​இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி வேகமாகச் சென்ற பாரவூர்தி, மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21ஆவது பிறந்தநாள் இன்று(22) என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!