போர் வீரர் நினைவுத்தூபி விவகாரம்: காவல்துறையில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாளை(22) தலங்கம காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லவில் உள்ள சிறிலங்கா ராணுவத்தின் போர்வீர்ரகளின் நினைவிடத்தில் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே மேற்படி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த உத்தரவின்படி, குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்ச நாளை காவல்நிலையத்தில் முன்னிலையாகத் தவறினால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 172ஆம் பிரிவின் கீழ் அவருக்குத் தண்டனை வழங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அத்துமீறி நுழைதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தலாங்கம காவல்துறையினர் இச்சம்பவம் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை நேற்று முன்தினம் (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!