கடந்த 12ஆம் திகதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அந்த விமானத்தில் இருந்த 241 பேரும் பலியான நிலையில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியான லண்டன் குடிமகன் விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.
இதேவேளை 19ஏ இருக்கையில் இருந்த அவரது சகோதரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் விஸ்வாஷ் குமாரின் சகோதரர் அஜய் குமார் ரமேஷின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் டையூவில் நேற்று (18) நடைபெற்றது.
இறுதிச்சடங்கில் கண்ணீர் மல்க கதறி அழுத விஸ்வாஷ் குமாருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.