குடும்ப தகராறில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனைவி – கணவர் கைது!

குளியாப்பிட்டிய – வல்பிடகம பகுதியில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, கணவர் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார் என்று குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வடுமுன்னேகெதர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 43 வயதுடைய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடும்ப வன்முறைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்