🔴 VIDEO ஓடும் ரயிலில் மூதாட்டியின் முடியை இழுத்து, சரமாரியாக அடித்து சண்டை போட்ட பெண்! வைரலாகும் வீடியோ

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இந்தியாவில் சென்னை புறநகர் ரயிலில் ஒரு மூதாட்டி மீது சில பெண்கள் மேற்கொண்ட தாக்குதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வீடியோவில், ஒரு இளம்பெண் மூதாட்டியின் முடியை பிடித்து இழுத்து தாக்கும் காட்சிகள் காணப்படுகிறது. மேலும், மூதாட்டியின் கையில் இருந்த செருப்பை கீழே எறிந்து, தொடர்ந்து தாக்கியதும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற பெண்கள் சண்டையை தடுக்க முயற்சி

இந்த தாக்குதலின் போது அருகிலிருந்த சில பெண்கள் அந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். பின்னர் அந்த பெண்ணை அழைத்து செல்லும் காட்சிகளும் காணப்படுகின்றன.

சம்பவ இடம் குறித்து குழப்பம்

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதி இல்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது சென்னை புறநகர் ரயிலில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள்

சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ வைரலானதுடன், இது சமூகத்தில் விவாதத்திற்கும் பரபரப்புக்கும் காரணமாகியுள்ளது.

இதையும் படிக்க-

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!