நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: 141 வீடுகள் சேதம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதியிலேயே இந்த வீடமைப்புச் சேதங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட வாரியாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் பின்வருமாறு:

களுத்துறை மாவட்டம்: 78 வீடுகள்

மட்டக்களப்பு மாவட்டம்: 25 வீடுகள்

இரத்தினபுரி மாவட்டம்: 12 வீடுகள்

காலி மாவட்டம்: 06 வீடுகள்

கொழும்பு மாவட்டம்: 05 வீடுகள்

மொனராகலை மாவட்டம்: 04 வீடுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம்: 04 வீடுகள்

கம்பஹா மாவட்டம்: 03 வீடுகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: 02 வீடுகள்

அனுராதபுரம் மாவட்டம்: 02 வீடுகள்

இதேவேளை, தொடரும் இந்த அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் 48 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!