நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: 141 வீடுகள் சேதம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதியிலேயே இந்த வீடமைப்புச் சேதங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட வாரியாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் பின்வருமாறு:

களுத்துறை மாவட்டம்: 78 வீடுகள்

மட்டக்களப்பு மாவட்டம்: 25 வீடுகள்

இரத்தினபுரி மாவட்டம்: 12 வீடுகள்

காலி மாவட்டம்: 06 வீடுகள்

கொழும்பு மாவட்டம்: 05 வீடுகள்

மொனராகலை மாவட்டம்: 04 வீடுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம்: 04 வீடுகள்

கம்பஹா மாவட்டம்: 03 வீடுகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: 02 வீடுகள்

அனுராதபுரம் மாவட்டம்: 02 வீடுகள்

இதேவேளை, தொடரும் இந்த அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் 48 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!