யாழில். போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன் , மனைவி

யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன் மனைவி ஆகியோர் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , மனைவி தலைமறைவாகியுள்ளார்.

மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!