இணையத்தை அதிர வைத்திருக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருடன் மற்றும் துணிச்சலான பெண் இடையே நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது.
காட்சியில், ஒரு துப்பாக்கியுடன் வந்த திருடன் கடைக்குள் புகுந்து உள்ளே இருந்த பெண்களை மிரட்ட முயல்கிறார். ஆனால் அந்தக் கடையில் இருந்த ஒரு துணிச்சலான பெண், பிற பெண்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பி, உடனே கதவுகளை பூட்டி விடுகிறார்.
Very smart woman! pic.twitter.com/24EIpyPyP2
— The Figen (@TheFigen_) July 15, 2025
திருடன் கதவை திறக்க பலவிதமாக முயற்சி செய்கிறார். துப்பாக்கியால் சுடும் அளவுக்கு பயம் காட்டினாலும் கதவை திறக்க முடியவில்லை. பின் கதவை உடைக்கவும் முயன்றார். முடியாததால், வெளியே உள்ளவர்களிடம் உதவி கேட்டார், ஆனால் யாரும் உதவவில்லை.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை துப்பாக்கி முனையில் கைது செய்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பிரபலமாக பரவி, பலரும் அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.