தாய், தந்தை, சகோதரியைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த நபர்

உத்தரப் பிரதேசம், காசிப்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக, நபர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியைக் கோடாரியால் தாக்கிக் கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்குப் பின், குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதலை உத்தரப் பிரதேச காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியைக் கோடாரியால் தாக்கியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறே இந்த கொலைகளுக்குக் காரணம் என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!