வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?

இன்று வரலட்சுமி நோன்பு நாள். மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற சிறந்த நாளாகக் கருதப்படும் இந்நாளில், சில புனிதப் பொருட்களை வாங்கி வைப்பது செல்வ வளத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.

1. நெல்லிக்கனி


நல்ல தரமான பெரிய நெல்லிக்கனியை பூஜையறையில் மகாலட்சுமி தாயாரின் படத்துக்கு முன் வைத்து வணங்குவது சிறப்பு பலனளிக்கும். புராணக் கதைகளின்படி, குபேரரின் வறுமை நீங்க நெல்லி மரத்தை வளர்த்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், நெல்லிக்கனி லட்சுமி தாயாருக்கும் குபேரருக்கும் உகந்ததாக கருதப்படுகிறது.

2. கல் உப்பு


வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து வைப்பது செல்வத்தை அதிகரிக்கும் என பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இந்நாளில் வாங்கப்படும் கல் உப்பு, வீட்டு வளத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

3. மஞ்சள் ரவிக்கை மற்றும் மஞ்சள் கிழங்கு


மஞ்சள் நிற ரவிக்கை துணி அல்லது துண்டுடன் குண்டு மஞ்சள் கிழங்கை மகாலட்சுமி தாயாரின் முன் வைத்து வழிபட வேண்டும். பின்னர், இதை சுமங்கலி பெண்களுக்கு வழங்கினால் கலச வழிபாட்டின் முழு பலனையும் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

வழிபாடு செய்ய முடியாதவர்களும், குறைந்தபட்சம் இந்த மூன்று பொருட்களை வாங்கி வணங்கி, குபேர சம்பத்துடன் செழிப்பான வாழ்வு பெறலாம்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!