போதைப்பொருளுடன் சிக்கிய NPP உறுப்பினரின் கணவர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நகர சபை உறுப்பினரின் கணவர், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலதிக விசாரணைக்காக நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பாடசாலை அதிபர், இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்போது, சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி, நகரசபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா, பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என்பதையும் காவல்துறையினர் வெளிப்படுத்தினர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பாடாசலை அதிபரின் சொத்துக்கள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.185 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!