அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டிருந்தனர்.
அதனைதொடர்ந்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில், பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
