லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து பொது மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது என்றும் போதுமான அளவு இருப்பு உள்ளது என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்டு, நிறுவனத்திடம் போதுமான அளவு இருப்பு இருப்பதாக லிட்ரோ நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.
தேவையற்ற பீதி வேண்டாம் என்று நிறுவனம் பொது மக்களிடம் கோரியுள்ளது.
பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஏற்கனவே 284,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று (19) முதல் சனிக்கிழமை வரை மேலும் 351,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
