கொலன்னாவ முனையத்திலிருந்து எரிபொருள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பிய பவுசர்கள்!

எரிபொருள் இன்று சனிக்கிழமை (21) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமைகளில் (22) விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த போதிலும், இன்று கொலன்னாவை முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை கொலன்னாவை முனையத்திற்குச் சென்ற எரிபொருள் பவுசர்கள், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார, நேற்று (20) தெரிவிக்கையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைபோல் செயற்படுத்தப்படும் என்றார்.

அதன்படி, எரிபொருள் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் கொலன்னாவை முனையத்திற்கு சென்ற பவுசர்கள் இன்று எரிபொருள் இன்றித் திரும்பியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!